தமிழ் மக்களின் வாக்குகள் தேசியப் பட்டியலுக்காகவே திரட்டப்படுகின்றது
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடக் காத்திருக்கும் கட்சிகள் எமது மாவட்டத் தமிழ் மக்களின் வாக்குகளைக் கட்சிகளின் தேசியப் பட்டியலுக்கான வாக்குச் சேகரிக்கும் தளமாக மாத்திரம் கருதிக் களமிறங்குவது வேதனை தருகிறது என முகநூல் பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எமது மாவட்டத்தின் நிலை அறிந்து யாரும் இதய சுத்தியுடன் மாவட்ட மக்களின் நலன் பற்றிச் சிந்திக்கவில்லை மாறாகப் பொய்யாக நாம் விட்டுக்கொடுக்கத் தயார் என கூறுகிறார்கள்.
ஆனால் தமது கட்சிக்கான வேட்பாளர்களையும் தயார் செய்து அவர்களும் வட்சப் குழுப் பிரச்சாரங்கள் சிறு சிறு சந்திப்புக்களையும் தமக்கான பிரச்சாரங்களையும் செய்து வருகிறார்கள் என்பதுவும் கவலைதான்
இருந்தாலும் உங்கள் அனைவரது வருகையினாலும் எமது மாவட்ட ஆசனம் இல்லாமல் போவது உறுதி எனும் தோற்றப்பாடு காணப்படுவதால் அனைவரும் ஒன்றாகி ஒரு ஆசனத்தைக் கைப்பற்றி மாவட்ட மக்களின் நலனைப் பேணாவிட்டாலும் தமக்குக் கிடைக்கும்
தேசியப்பட்டியல் ஆசனத்தில் ஒன்றையாவது எமது மாவட்டத்திற்கு வழங்கி எமது மக்கள் வழங்கும் வாக்கிற்கும் அவர்களது நம்பிக்கைக்கும் எதிர்காலத்திற்கும் பாத்திரமாகுங்கள்.
உண்மையில் மக்களுக்காக ஒன்றுபட்டால் மகிழ்ச்சியுடன் உங்களுக்காகக் களத்தில் நாமும் பணி செய்யக் காத்திருக்கிறோம் இல்லையேல் மக்கள் எடுக்கும் இறுதித் தீர்மானத்தோடு நாமும் இணைவோம் என பதிவிலி குறிப்பிடப்பட்டுள்ளது.