இலங்கையிடம் சர்வதேச மன்னிப்பு சபையின் வலியுறுத்தல்!
இலங்கை அரசாங்கம் அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிற்கும் போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
இவ் விடயம் தொடர்பாக தமது புதிய ஆய்வு தொடர்பில் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள தமது அறிக்கையிலே சர்வதேச மன்னிப்பு சபை இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.
வாழ்வாதார இழப்பு மற்றும் பணவீக்கம்
"வாழ்வாதார இழப்பு மற்றும் பணவீக்கம் என்பன பெண்களின் கொள்வனவு திறனை குறைத்துள்ளன.
அத்துடன் தாய்வழி ஊட்டச்சத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்ட அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தீவிரம் காரணமாக சுகாதாரம் மற்றும் போஷாக்கு என்பன பின்னடைவை சந்தித்துள்ளன.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்துகின்றன" என சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசியாவிற்கான பிரதி பிராந்திய பணிப்பாளர் தினுஷிகா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்