இலங்கைக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண் மர்ம மரணம் ; தீவிர விசாரணையில் பொலிஸார்
இலங்கைக்கு சுற்றுலா வருகை தந்திருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் கண்டி அருப்போலாவில் உள்ள தர்மசோக மாவத்தையில் ஒரு வீட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அவர் சுற்றுலா விசாவின் மூலம் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த கெய்ட்லின் ஜூலி கிளார்க் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் மூன்று மாதங்களாக வாடகை வீட்டில் தங்கி வருகின்றார்.

செவ்வாய்க்கிழமை(04) அன்று அவர் சிகிரியாவுக்கு சுற்றுலா சென்று வீடு திரும்பியுள்ளர் என்றும் மேலும் குறித்த பெண் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவராக இருக்கலாம் என்று பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணையில் சந்தேகிக்கின்றனர்.
வியாழக்கிழமை (06)அன்று பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய மருத்துவமனையின் பிணவறைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது.
கண்டி சுற்றுலா பொலிஸ் துறையின் பொறுப்பதிகாரி சிஐ லலித் மகாக்தர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.