அதிமுக வட்டாரத்தில் திடீர் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முக்கிய முடிவு!

Tamil nadu AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Shankar Oct 23, 2022 01:14 PM GMT
Shankar

Shankar

Report

எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசியலை விட்டே விலகும் முடிவை எடுத்துள்ளதாக, வெளியாகி இருக்கும் தகவல் ஆதரவாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் இலை மறை காயாக இருந்து வந்த ஒற்றைத்தலைமை விவகாரத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியில் போட்டுடைத்துள்ளார்.

அதிமுக வட்டாரத்தில் திடீர் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முக்கிய முடிவு! | Aiadmk Edappadi Palaniswami Decided Quit Politics

அன்றில் இருந்து இன்று வரை எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்து, அதிமுகவில் பிரிவினையை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு புறம் எடப்பாடி பழனிசாமி, மறு புறம் ஓ.பன்னீர்செல்வம் தங்களுக்கான ஆதரவாளர்களை திரட்டிக்கொண்டு தனித்தனி அணியாக செயல்பட்டு வருவதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.  

இதற்கிடையே நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுக வட்டாரத்தில் திடீர் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முக்கிய முடிவு! | Aiadmk Edappadi Palaniswami Decided Quit Politics  

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்ஜிஆர் மாளிகையை தாக்கியதாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருந்தே நீக்கி உத்தரவிட்டார்.

இதில், அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுக விவகாரத்தை கீழமை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்கிற தீர்ப்பினை உயர்நீதிமன்றம் அளித்தது.

அதிமுக வட்டாரத்தில் திடீர் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முக்கிய முடிவு! | Aiadmk Edappadi Palaniswami Decided Quit Politics

இதன் தொடர்ச்சியாக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை முற்றிலும் அதிமுகவில் இருந்து ஓரம் கட்ட, எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்தார். இதை அறிந்த ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. இது, எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுக வட்டாரத்தில் திடீர் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முக்கிய முடிவு! | Aiadmk Edappadi Palaniswami Decided Quit Politics

இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிச்சாமி அடுத்தக்கட்டமாக மேலும், சில ஆவணங்களை தயார் செய்து கொண்டு, தேர்தல் ஆணைய அதிகாரிகளை நாடியபோது அவரது ஆவணங்களை வாங்க ஆணையம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் தனக்கு எதிரான சூழல் நிலவியதால் டெல்லிக்கு விரைந்து, பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். ஆனால் அவர்களோ ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தி அனுப்பினர்.

இதில், துளியும் விருப்பம் இல்லாத எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு ஆர்.பி.உதயகுமாரை எதிர்கட்சி துணை தலைவராக நியமித்து சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பினார்.

அதிமுக வட்டாரத்தில் திடீர் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முக்கிய முடிவு! | Aiadmk Edappadi Palaniswami Decided Quit Politics

இந்த கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்ததால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் விரக்தியின் உச்சத்துக்கே சென்றனர். இதன் காரணமாக அதிமுகவில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்த சூழலில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்து வந்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தனது இறுதி அறிக்கையை சமீபத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. 

அதில் எடப்பாடி பழனிச்சாமி நிமிடத்துக்கு நிமிடம் துப்பாக்கி சூடு குறித்த தகவல்களை பெற்றுக்கொண்டு இருந்தார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

அதிமுக வட்டாரத்தில் திடீர் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முக்கிய முடிவு! | Aiadmk Edappadi Palaniswami Decided Quit Politics

ஒருபுறம் உச்சநீதிமன்ற உத்தரவு.. பாஜக கோபம்.. தேர்தல் ஆணையம் காட்டம்..சபாநாயகர் அலட்சியம் என இருக்கையில் மறுபுறத்தில் தூத்துக்குடி விவகாரம் மிரட்டுவதால், அதிமுக தன்னை விட்டு போய் விடுமோ? என்கிற அச்சத்தில் எடப்பாடி பழனிச்சாமி உறைந்து போய் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் ஆணைய உத்தரவு, உச்சநீதிமன்ற தீர்ப்பு தனக்கு பாதகமாக வரும் பட்சத்தில் அரசியலை விட்டே, விலகி இருக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. 

இதை அறிந்து கலங்கிப்போன அவரது ஆதரவாளர்கள், ‘அப்படி எல்லாம் ஒன்று ஆகாது.. தலைவரே.. ஆவணங்களும், அதிமுகவினரும் நம்மிடம் தான் உள்ளனர் என்பதால் தீர்ப்பும் நமக்கு சாதகமாகத்தான் வரும்’ என ஆறுதல் கூறி வருவதாக சேலம் அதிமுகவினர் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

அதிமுகவின் ஒற்றை தலைமையாக இருக்க வேண்டும் என்பது, எடப்பாடி பழனிசாமியின் ஆசை. ஆனால் அவரது ஆசை நடக்குமா? அல்லது அரசியலை விட்டு விலகக்கூடிய சூழல் ஏற்படுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருகோணமலை, London, United Kingdom

21 Sep, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Narantanai, யாழ்ப்பாணம், மெல்போன், Australia

25 Sep, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US