20 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று 6 பேருக்கு இன்று மரண தண்டனை
20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஆறுபேருக்கு மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
திருமணம் முடிக்காத நபரொருவர் சிங்களப் புத்தாண்டு தினத்தன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலைச் செய்யப்பட்டார்.
படுகொலைச் சம்பவம்
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றச்சாட்டப்பட்டிருந்த அறுவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகியுள்ளது.
இந்நிலையில் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் அந்த அறுவருக்கும் செவ்வாய்க்கிழமை (23) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கால்நடை தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வந்த மோதலில் 30 வயதான திருமணமாகாத நபர் குற்றம் சாட்டப்பட்டவர்களால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டின் பேரில் 21 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 15 பேர் விடுதலைச் செய்யப்பட்டிருந்த மை குறிப்பிடத்தக்கது.