திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய நடிகை ஓவியா
தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் ஹிட்டாக ஓடும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் சீசன் 1 இல் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் நடிகை ஓவியா. இவர் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்ற முதல் பல படங்களிலும் நடித்தவர். அந்த வகையில் இவர் தமிழில் களவாணி என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர்.
இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமே மிகவும் பிரபல்யமானார்.இந்நிகழ்ச்சியில் யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது.
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஓவியா, நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு படங்களில் பிசியாக வலம் வருவார் நம்பப்பட்டது. ஆனால் இன்னும் சரியான படவாய்ப்பு அமையவில்லை எனலாம். இவ்வாறுஇருக்கையில் பெண்களின் திருமண வயது 18ஆக இருந்தது.
Increasing #MarriageAge is a right decision! You don’t need to sacrifice many things and take very big responsibilities at an early age! I strongly support 👍
— Oviyaa (@OviyaaSweetz) January 12, 2022
அண்மையில் மத்திய அரசு பெண்களின் திருமண வயதை 21ஆக மாற்றி சட்டம் அமைத்துள்ளனர்.இந்த அறிவிப்பை பலரும் வரவேற்றார்கள், அதைப்பற்றி மக்கள் அதிகம் டுவிட் செய்திருந்தார்கள்.
எனினும் தற்போது பெண்களின் திருமண வயதை 21ஆக ஏற்றியது வரவேற்க கூடிய விஷயம் தான். சிறு வயதிலேயே திருமணம் செய்து மிகப்பெரிய பொறுப்பை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.
இதை நான் உறுதியாக வரவேற்கிறேன் என டுவிட் செய்துள்ளார் நடிகை ஓவியா.மேலும் அவரது டுவிட்டிற்கும் ரசிகர்கள் லைக்ஸ் குவித்து தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.