சினிமாவுக்காக இலங்கை வரும் நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமான பாராசாக்தி படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் பராசக்தி படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.
பாராசாக்தி - இரண்டாவது கட்ட படப்பிடிப்பு
சூரரை போற்று படம் ஏற்படுத்திக் கொடுத்த மிகச்சிறப்பான என்ட்ரியை தொடர்ந்து அவரது இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
அதேவேளை முன்னதாக இந்தப் படத்தில் சூர்யா இணைந்திருந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். படத்தின் முதல்கட்ட சூட்டிங் மதுரை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது.
இதையடுத்து படக்குழுவினர் இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்காக விரைவில் இலங்கைக்கு வரகை தரவுள்ளனர்.
அதேவேளை பாராசாக்தி சிவகார்த்திகேயனின் 25வது படமாகவும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் 100வது படமாகவும் உருவாகி வருவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.