பேஸ்புக் நிறுவனம் எடுக்கவுள்ள அதிரடி முடிவு!
முகநூல் சமூகவலைதளம் விரைவில் பெயரை மாற்றவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிகின்றன. சமூக வலைதள உலகின் முக்கிய பங்கினையற்றிவருவது முகநூல்.
முகநூல் நிறுவனம் (Facebook) வாட்ஸ் அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram), ஆக்குலஸ் (Oculus) என இன்னும் பல பிரபல சமூக வலைதளங்களையும் இயங்கிவருகின்றது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதியன்று இந்தியா, இலங்கை உள்பட உலகம் முழுவதும் முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் 6 மணி நேரம் வரை முடங்கின. இதுவே முகநூலின் மிகப்பெரிய அவுட்டேஜாகக் கருதப்படுகிறது.
உலகப் பணக்காரர்கள் தரவரிசைப் பட்டியலில் மேலிருந்த CEO மார்க் ஜூக்கர்பெர்க் (Mark Elliot Zuckerberg) இதனால் சரசரவென்று கீழே தள்ளப்பட்டார். அக்டோபர் 9 ஆம் தேதி மீண்டும் இன்ஸ்டா, மெசெஞ்சர் முடங்கின. இப்படி அடுத்தடுத்து தொழில்நுட்ப சவால்களை முகநூல் நிறுவனம் சந்தித்து வந்ததுள்ளது.
இந்நிலையில் முகநூல் நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளதாக தகவல் கசிந்த வண்ணம் உள்ளன. இந்தக் கூட்டத்தில் முகநூலின் பெயரை மாற்ற அந்நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர்பெர்க் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய தயாரிப்புடன் தாய் நிறுவனத்தின் கீழ் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஆக்குலஸ் (Oculus) ஆகியன கிளை நிறுவனங்களாக இயங்கும் எனவும் கூறப்படுகிறது.