யாழ் மாநகர வீதியில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக அதிரடி தீர்மானம்!
யாழ். மாநகர எல்லைக்குள் உள்ள வீதிகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுகின்றவர்களை ஒளிப்பதிவு மற்றும் புகைப்பட ஆதாரத்துடன் மாநகர சபைக்கு சமர்ப்பிப்பவர்களிற்கு குற்றத்திற்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் 10% தொகையினை சன்மான தொகையாக வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
யாழ். மாநகரசபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்களின் குடியிருப்புக்களுக்கு முன்னுள்ள வீதியோரத்தினை அவர்கள் தூய்மையாக பேண வேண்டும்.
வீதியோரங்கள் பற்றையாக உள்ளமையினால் அதற்குள் குப்பைகளை வீசிவிட்டுச் செல்கின்றார்கள். அதற்கு அவ்வீதியில் உள்ள மக்களே பொறுப்பு கூற வேண்டும்.
அவ்வாறு தூய்மையாக பேணாவிடின் அவர்களிடமிருந்து ரூபா 3000.00 குற்றப்பணமாக அறவிடுவது எனவும் மாநகர முதல்வர் வி.மணிவிண்ணனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.