யாழில் சற்று முன்னர் கோர விபத்து; நல்லூர் கந்தன் கொடியேற்ற தினத்தில் சோகம்
Jaffna
Sri Lanka Police Investigation
Accident
By Sulokshi
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்தும் , ஹயஸ் வாகனமும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹயஸ் வாகனம் கடும் சேதம்
விபத்தின் போது தனியார் பேருந்து வீதியைவிட்டு விலகி கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது.
விபத்தில் ஹயஸ் வாகனம் கடும் சேதமடைத்துள்ள நிலையில் , இரு வாகனங்களின் சாரதிகளும் கடும் காயமடைந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை நல்லூர் கந்தன் கொடியேற்ற நாளில் பக்தர்கள் கோயிலுக்கு சென்றுவரும் நிலையில் , இந்த விபத்து சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US