இலங்கையில் மூன்று வாகனங்கள் மோதி பயங்கர விபத்து! குடும்பஸ்தர் உயிரிழப்பு
இரத்தினிபுரி மாவட்டத்தில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம், கொடகவெல, பெல்மடுல்ல - நோனாகல வீதியில் மல்வத்தைப் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இரத்தினபுரி நோக்கிப் பயணித்த ஓட்டோ ஒன்று எதிர்த்திசையில் பயணித்த தனியார் பேருந்துடன் மோதி கவிழ்ந்து பின்புறத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின்போது முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கொடகவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் இரத்தினபுரி, கஹவத்தை பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
தனியார் பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.