வாழைச்சேனையில் கோர விபத்து; பஸ்ஸுடன் மோதிய மோட்டார் சைக்கிள்
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (25) காலை 10.30.மணியளவில் வாழைச்சேனை மீராவோடை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
ஒருவரின் நிலை கவலைக்கிடம்
ஓட்டமாவடி - மீராவோடை ஊடாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை கிளை பஸ் வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியால் மூன்று மோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களே இவ் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில், இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.