யாழில் சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்
யாழ்.காரைநகர் வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பகுதியில் வீதிப் புனரமைப்பு வேலையின்போது வீதியின் இருமருங்கிலும் ஆழமான குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், சாரதியின் கவனக்குறைவால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரியவருகிறது.
சம்பவம் குறித்து இ.போ.சபையின் காரைநகர் சாலை முகாமையாளர் கூறுகையில்,
குறித்த பாதையினூடாக யாழ்.நோக்கி சேவையில் ஈடுபட்டபோது முன்னால் சந்திரா தனியார் பேருந்து வீதியில் காணப்பட்ட குளிர் காரணமாக சரியாக பிடித்து அதன் காரணமாக பின்னால் சென்று கொண்டிருந்த போக்குவரத்து சபை பஸ் வண்டி திடீரென பிரேக் பிடித்தால் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்தார்.
எனினும் இந்த சம்பவத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.