காதல் விவகாரத்தால் உயிரை மாய்த்த இளைஞன்; தமிழர் பிரதேசத்தில் சம்பவம்
காதல் விவகாரத்தால் 24 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் அம்பாறை காரைதீவில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாறை காரைதீவு புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் பூஜை அறையில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் இளைஞன் ஒருவன் புதன்கிழமை(21) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் பணிப்புரைக்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் புதன்கிழமை(21) மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த காரைதீவு -12 பிரதான வீதியை சேர்ந்த 24 வயது இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காதல் விவகாரம் காரணமாக தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என்பது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இளைஞனின் மரணம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.