இது ஒரு சாபம் ; யாரும் அடிமையாகாதீர்கள்; மாணவி ஒருவரின் உருக்கமான கோரிக்கை!
அண்மைக்காலமாக நாட்டில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அரசாங்கம் அதனை தடுக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அதன்படி பாடசாலைகளில் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். போதை பொருள் பழக்கமானது, பாடசாலை மாணவர்களிடம் மட்டுமல்லாது பல இளைஞர் யுவதிகளுக்கு இதற்கு அடியாகியுள்ளனர்.
மாணவி ஒருவரின் உருக்கமான கோரிக்கை
இந்நிலையில் நாட்டில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இரண்டு பாடசாலை மாணவிகளின் துயர அனுபவம் தொடர்பில் அவர்கள் பகிந்த தகவல்கள் பேருபொருளாகியுள்ளது.
அந்தவகையில் கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் யுவதி ஒருவர் தான் எவ்வாறு ஐஸ் போதைக்கு அடிமையாகினர் என்பதனை கூறியுள்ளதுடன் , போதை பொருளுக்கு யாரும் அடிமையாக வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அம்மாணவி கூறுகையில், “எனக்கு வயது 22 , நண்பரோடு பார்ட்டிக்கு போயிருந்தேன்.
அங்கு தான் முதலில் இதனைக் கண்டேன், அன்று பாவித்தது தான் இன்று வரையில் என்னால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. பாடசாலை முடிந்ததும் முதலில் நான் தேடுவதும் எனக்கு கொண்டு வந்து தரப்படும் ஐ ரக போதையை தான். எனக்கும் இதிலிருந்து விடுபடணும் என்பதுதான் எனது ஆசையாக உள்ளது..ஆனாலும் அதனை விட முடியவில்லை.
ஐஸ் என்பது இவ்ளோ பெரிய விஷயமா இருக்கும்னு நினைக்கல.. இதற்கு யாரும் அடிமையாக வேண்டாம், இது ஒரு சாபம் என கூறியுள்ளார்.
இரவு விடுதி
அதேவேளை இரவு விடுதிகளில் ஐஸ் போதைப்பொருள் அதிகமாக பரவி வருவதாக இரவு கிளப் ஒன்றில் பணிபுரியும் இளம் பெண் ஒருவர் தெரிவித்திருந்தார். “கிளப்பில் வேலை பார்த்தபோது 2 வருஷத்துக்கு முன்னாடி கொஞ்சம் கொஞ்சமா அதுக்கு அடிமையானதாக கூறியுள்ளார்.
ஒரு நண்பர்தான் முதலில் அதனை எனக்கு கொடுத்தார்.. அதனை உபயோகிக்கும் போது சாப்பிட முடியாது.. தூக்கம் வரும். உடல் பலவீனமாகிறது. கிளப்பில் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் எனக்கு வழங்கினார்கள்.
அங்கு இந்த தொழில் செய்பவர்கள் வருவார்கள். எம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது, என்ன செய்வது என்று தெரியவில்லை, இலங்கையில் இது மறைய வேண்டும் என அவர் கண்ணீருடன் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.