கொடுக்கல் வாங்கல் பிணக்கில் கத்திக்குத்து!
அநுராதபுரம் பிரதேசத்தில் பூக்கடை ஒன்றிற்கு அருகில் கத்தி குத்துக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளதாக உடமலுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (22) இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் பூக்கடை ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் சக பணியாளர் ஒருவருடன் பணத்தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதில் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் பந்துலகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை உடமலுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.