சளி மற்றும் இருமல் வரை நிவாரணம் தரும் மசாலா பொருள்
தினசரி பயன்படுத்தும் ஒரு மசாலாவை ஒரு சிட்டிகை வெந்நீரில் கலந்து குடித்தால் தலைவலியில் இருந்து சளி மற்றும் இருமல் வரை நிவாரணம் தருவதோடு பல ஆச்சிரயமான நன்மைகளை தருகின்றது என்று கூறப்படுகின்றது.
வாயுத்தொல்லை, வயிற்றுப் பொருமல், என பல நன்மைகளைக் கொடுக்கும் பெருங்காயம் தான் உடல் எடையைக் குறைக்கும் பொருளாகவும் செயல்படுகிறது.
வீட்டு மசாலாப் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் சில உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அத்தகைய ஒரு மசாலா பெருங்காயம் ஆகும்.
இதை உணவில் சேர்த்தால் உணவின் வாசனை அதிகரிக்கும்.
தீர்வு
அடிக்கடி தலைவலி வருபவர்களுக்கு பெருங்காயத்தை வெந்நீரில் கலந்துக் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அத்துடன் தலையின் இரத்த நாளங்களில் வீக்கத்தைக் குறைப்பதோடு, தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
சளி மற்றும் இருமல் இருந்தால் வெந்நீர் மற்றும் பெருங்காயத்தை உட்கொள்வதன் மூலம் சுவாச பிரச்சனைகளை சமாளிக்கலாம்.
அத்தோடு மாறிவரும் பருவத்தில் பெருங்காயத்துடன் வெந்நீர் சேர்த்தால் மிகவும் நன்மை பயக்கும்.
மேலும் இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.