பாடசாலை விடுதிக்கு சென்ற இளம் ஆசிரியை; தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பதுளை - பிட்டமாருவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் இளம் ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பதுளை - லுணுகலை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது பெண்ணாவார். உயிரிழந்த ஆசிரியை விடுதியில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேடிச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி
நேற்று (24) பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின் விடுதிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் ஆசிரியை விடுதிக்குச் சென்றவர் .
மீண்டும் பாடசாலைக்கு திரும்பாததால் அவருடன் கடமையாற்றும் ஏனைய ஆசியைகள் குறித்த விடுத்திக்குச் சென்று பார்த்தபோது உயிரிழந்த நிலையில் காணப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியையின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.