பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு நாமலிடமிருந்து சென்ற கடிதம்!
இலங்கையில் மிகவும் பயனுள்ள அரச சேவையை உருவாக்குவதற்கான யோசனை அடங்கிய கடிதம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் சமர்ப்பித்துள்ளார்.
பொதுத் துறையில் கள உத்தியோகத்தர்களாகப் பணிபுரிபவர்கள் 5 நாட்களும் வேலை செய்வதற்குப் பதிலாக வாரத்தில் 2 அல்லது 3 நாட்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வேலை செய்ய அனுமதித்தால் அதிக உற்பத்தித் திறனுடன் பணியாற்ற முடியும் என்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
கள உத்தியோகத்தர்களாக கடமையாற்றுபவர்கள் அந்தந்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமையாற்றுவதற்கு இயலுமைப்படுத்தப்பட்டால், அதன் மூலம் அதிக உற்பத்தியான பொது சேவையை வழங்க முடியும் என நாமல் ராஜபக்ச தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்த யோசனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பரிசீலிக்குமாறு பிரதமரிடம் நாமல் ராஜப்கக்ஷ கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.