தனது சொந்த மகளை சித்திரவதை செய்த தந்தை
மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய தந்தை 4 வயதும் 11 மாதமும் ஆன தனது மகளை சித்திர வதை செய்துள்ளார்.
சிறுமியின் பாட்டி சிறுவர் மற்றும் பெண்கள் துஸ்ப்பிரியோக தடுப்பு பணியகத்திற்கு செய்த முரண்பாட்டினால் நபர் நேற்று (18) மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தொடர்ச்சியான வாக்குவாதங்கள் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் சிறுமியை அவரது பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சந்தேக நபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பொலிஸார் நடத்திய விசாரணையில் சிறுமியை சித்திரவதை செய்து அதனை பதிவு செய்து மனைவிக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.
சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இன்று (19) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.