யாழ் பேருந்து நிலையத்தில் முகம் சுழிக்க வைத்த நபர்!
யாழில் போதையில் பயணிகள் பஸ்ஸில் குழப்பம் விளைவித்த குடிமகனால் அங்கிருந்தவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
யாழ் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் மினி பஸ்ஸை எடுக்க விடாது அதன் சில்லுக்குள் கால்களை நீட்டிக்கொண்டிக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து கடும் பிரயத்தப்பட்டு அங்கிருந்த ஒருவர் குடிமகனை வெளியில் இழுத்து விட்டபோதும், போதையில் இருந்தவர் மீண்டும் பேருந்தின் கீழா செல்ல முயன்றதனால் பரப்ரப்பு ஏற்பட்டது.
அதன் பின் ஒருவழியாக போதை ஆசாமியை இழுத்து எடுத்துவிட்டு பேருந்து சென்ற நிலையில், குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அதேவேளை அதிக வாகன நெரிசல் உள்ள பகுதியில் போக்குவரத்து பொலிசார் தமது கடமைகளை செய்யாமை பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.