திருநங்கை, திருநம்பி தம்பதிக்கு பிறந்த குழந்தை
தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த டான்னா சுல்தானா (Danna Sultana) ஒரு கொலம்பிய மாடல் என்பதுடன் அவர் ஆணாக பிறந்துள்ள நிலையில் அவர் இப்போது ஒரு பெண்ணாக மாறியுள்ளார், ஒரு திருநங்கை ஆவார்.
அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் (Esteban Landra) பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார், ஒரு திருநம்பி ஆவார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் இயற்கை முறையில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியிருந்தாலும் அவரது உடலில் கர்ப்பம் தரிப்பதற்கான பெண்ணுறுப்புகளை அவர் அறுவைசிகிச்சை செய்து மாற்றிக்கொள்ளவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் தனது கணவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சுல்தானா சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் பலரையும் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது
எனினும், சுல்தானா மற்றும் எஸ்டெபன் இருவருக்கும் இயற்கையான பிறப்பு உறுப்புகள் இருப்பதால் இந்த தம்பதியினர் தங்கள் குழந்தையை இயற்கையாக கருத்தரிக்க முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது முதன்முறையல்ல என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்."முன்னதாக, 2020இல் அமெரிக்காவின் ஒரேகானில் ஒரு பெண்ணாக பிறந்து பின் ஆணாக மாறிய ஒருவர் இதுபோன்று குழந்தை பெற்றெடுத்துள்ளதாகவும்" கூறியுள்ளனர்.