வீதியை கடந்த மாணவன்; தரதரவென இழுத்துச்சென்ற முச்சக்கரவணடி
பாதசாரி கடவையில் வீதியை கடந்துச் சென்றுக்கொண்டிருந்த மாணவனை அதிவேகமாக வந்த முச்சக்கர வண்டி , மோதிய காட்சிகள் சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
இந்த விபத்து ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் செவ்வாய்க்கிழமை (07) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மஞ்சள் கோட்டில் வீதியை கடந்த மாணவன்
இதில் பலத்த காயங்களுக்குள்ளான மாணவன் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தனியார் வகுப்பில் பங்கேற்க வந்த மாணவன், வீதியை கடக்க முற்பட்ட போது அதிவேகமாக வந்த முச்சக்கரவண்டி மோதி மாணவன் சில அடிகள் தூரம் தரையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதில் மாணவன் படு காயமடைந்தாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து முச்சக்கரவண்டியின் சாரதியை கைது செய்த திம்புள்ள-பத்தனை பொலிஸார் சந்தேக நபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.