வவுனியா மாவட்டத்தில் 85 பாடசாலைகள் திறப்பு
வவுனியா மாவட்டத்தில் நாளை முதல் 85 பாடசாலைகள் முதல் கட்டமாக மீளத் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்தார்.
பாடசாலைகளை மீளத் திறத்தல் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் கூறினார்.
நாட்டில் கோவிட் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை கட்டம் கட்டமாக மீறத் திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில் நாளை வவுனியா 200 குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் முதல் கட்டமாக திறக்கப்படவுள்ளன.
அதன்படி வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு வலயங்களுக்கு உட்பட்ட 85 பாடசாலைகள் முதல் கட்டமாக திறக்கப்படவுள்ளன. உரிய சுகாதார முன்னேற்பாடுகளுடன் அவை திறக்கப்படவுள்ளன.
இந்நிலையில் பாடசாலைகளினை மீள திறப்பதற்கு அப்பகுதி கிராம அலுவலர், சுகாதார பிரிவினர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பையும் கேட்டுக்கொள்வதாகவும் கு.திலீபன் தெரிவித்தார்.