டக்ளஸை தொடர்ந்து சிக்கப்போகும் 80 முக்கிய அரசியல் புள்ளிகள் ; பீதியில் தென்னிலங்கை தலைமைகள்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு ஜனவரி 9ஆம் திகதி வரை டக்ளஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவர்களுக்கு பின்னர் இன்னும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சநிலை தற்போது உருவாகியுள்ளது.

80 அரசியல்வாதிகளின் பெயர் பட்டியல்
2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
நல்லாட்சி காலம் முடிந்து கோட்டாபய ராஜபக்ச ஆட்சி ஆரம்பிக்கும் போது பாதாள உலககுழு தலைவர் மாகந்துரே மதுஸ் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் 80 அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடுவதாக குறிப்பிட்டிருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டமையானது பல சந்தேகங்களை எழுப்பியது.
இது போன்ற பல விடயங்கள் குறித்து விளக்குகிறது நாட்டுநடப்புகள் நிகழ்ச்சி..