யாழ்ப்பாணத்தில் இருந்து 8 பேர் தமிழகத்திற்கு தப்பியோட்டம்!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேலும் 8 பேர் இன்று சனிக்கிழமை (15) தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து புகலிடம் தேடி அகதிகளாக நேற்றிரவு சுமார் 8 மணியளவில் பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனையை சென்றடைந்தனர்.
இலங்கை பொருளாதார நெருக்கடி
தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு ராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்துக்கு இதுவரை வந்த அகதிகளின் எண்ணிக்கை 265ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.