கடலில் நீராடச் சென்ற 6 பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!
Sri Lanka Police
Galle
Sri Lanka Police Investigation
Death
By Sundaresan
காலி, ஹபராதுவ, தல்பே கடலில் நீராடச் சென்ற 6 மாணவர்கள் கடலலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.
இச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் 5 மாணவர்களை பிரதேசவாசிகள் மற்றும் பொலிசார் காப்பாற்றியுள்ள நிலையல் ஒரு மாணவரை காணவில்லை.
இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போன மாணவன் குருநாகல் பொத்துஹெர பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது குருநாகல் பகுதியில் மேலதிக வகுப்பு ஒன்றின் ஏற்பாட்டில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த மாணவர்கள் குழுவொன்று தல்பே கடற்கரையில் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US