55 வேட்பாளர்கள் கைது
தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 55 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலுஸார் தெரிவித்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் மே மாதம் 06 ஆம் திகதி) 604 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
476 முறைப்பாடு
அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 476 முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 128 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 55 வேட்பாளர்களும் 208 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட 47 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.