500 கலைஞர் உணவகங்கள்: உணவுத்துறை அமைச்சர் அதிரடி
தமிழகத்தில் கூடுதலாக 500 சமுதாய உணவங்கள் “கலைஞர் உணவகம்” என்ற பெர்யரில் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெறும் அனைத்து மாநில ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி (R.SAKKARAPANI) இதனை தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் அம்மா உணவகங்களை போல் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, அம்மா உணவகம் என்ற பெயரில் 650 சமூக உணவகங்கள் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு பெறும் ஆதரவுகள் சமூக வலைதளங்களில் வந்துகொண்டுள்ளன.