மாணவியை கர்ப்பமாக்கிய 45 வயது நபருக்கு இறுதியில் ட்விஸ்ட் ; 02 மனைவிகள், 4 குழந்தைகள் இருக்கையில் அரங்கேறிய சம்பவம்
காஞ்சிபுரத்தில் 11 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று குடும்பம் நடத்தி வந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி திருவிழாவுக்கு சென்ற போது திடீரென மாயமானார்.

தலைமறைவு
சிறுமியை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
அப்போது சிறுமியிடம் அடிக்கடி பேசி வந்த நபரின் தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தபோது 45 வயதான ஒருவருடையது என்பது தெரியவந்ததுள்ளது. தலைமறைவான அவரை விடுதி ஒன்றில் வைத்து மாணவியுடன் கைது செய்துள்ளனர்.
அவருடன் இருந்த மாணவி கழுத்தில் தாலி அணிந்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவர்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் குறித்த ஆணுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.
அவருக்கு கல்லூரி படிக்கும் மகன் உட்பட மூன்று பிள்ளைகள் உள்ளனர். முதல் மனைவி இருக்கும்போதே வேறொரு பெண்ணை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இதனிடையே, இரண்டு மனைவிகளுக்கும் தெரியாமல் பள்ளி மாணவிக்கு காதல் வலை வீசியுள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரியாமல் சிறுமியும் அவருடன் நெருங்கி பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் திருமண ஆசைவார்த்தை கூறி மாணவியிடம் எல்லை மீறியுள்ளார்.
இதனால் மாணவி கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோயில் திருவிழாவுக்கு வந்த மாணவியை கடத்திச் சென்று தாலி கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து வழக்கு பதிந்த பொலிஸார் அவரை கைது செய்தனர். ஏற்கனேவே இரண்டு மனைவிகள் மற்றும் 4 குழந்தைகள் உள்ள நிலையில் 45 வயது நபர் 11 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று தாலி கட்டி குடும்பம் நடத்திய சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.