துணுக்காயில் 4000 பேரின் உடலங்கள்; காணொளி வெளியிட்ட பெண்; தமிழ் இளைஞர்கள் செய்த தரமான சம்பவம்
யாழ்ப்பாணம்- செம்மணி உள்ளிட்ட அரச படையினரின் இனப்படுகொலைகளைத் திசை திருப்ப யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் வெளியிட்ட காணொளி தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் துணுக்காயில் தனது தந்தை உட்பட 4000 பேரின் உடலங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காயில் புதைக்கப்பட்டுள்ளதாக அப்பெண் சமூக வலைத்தளத்தில் காணொளி பகிந்துள்ளார். பெண்ணின் பொய்யுரைக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ் இளைஞர்கள் செய்த தரமான சம்பவம்
இந்நிலையில் எம் தாய் மண்ணுக்காகப் போராடிய மான மா மறவர் மீது இட்டுக்கட்டிக் களங்கம் கற்பித்து பொய் வரலாறு எழுத ஊடகம் என்ற பெயரில் துணுக்காய் வந்த சூழ்ச்சியாளர்களை அங்கிருந்த இளைஞர்களின் சரமாரி கேள்விக்கணைகளால் துளைத்தனர்.
பதில் தெரியாது அவர்கள் திணறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் துணுக்காய் இளைஞர்களின் துணிச்சலான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.