4 கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை; மூன்று இலட்ச ரூபா பணம் திருட்டு
தலவாக்கலை நகரில் 4 கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் திங்கட்கிழமை (10) இரவு இடம் பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியின் அருகாமையிலுள்ள மருந்தகம், வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையம், ஹாட்வெயார் மற்றும் டயர் கடை ஆகியனவே இனந்தெரியோதாரால் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைபாடு
அத்தோடு ஹாட்வெயாரிலுள்ள மூன்று இலட்ச ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.
அதேவேளை ஏனைய கடைகளில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் தொடர்பாக கடை உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.