மட்டக்களப்பில் 33 பவுன் தங்க நகைகளை பறிகொடுத்த குடும்பம்!
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பகுதியில் வீடொன்றின் கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 20 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம், சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 33 அரை பவுன் கொண்ட தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது.
புன்னைச்சோலை சேமக்காலை வீதி 4ம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு வீட்டார் ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ளனர்.
பொலிஸார் தீவிர விசாரணை
இதன் போது வீட்டின் சமையலறை பகுதி கதவை உடைத்து வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் அங்கு அறைகளில் உள்ள அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சுமார் 33 அரை பவுன் கொண்ட தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார், தடயவியல் பிரிவு பொலிஸார் அழைக்கப்பட்டு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.