5 மாதங்களில் 32 சிறுமிகள் கர்ப்பம் ; அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்
நாட்டின் இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் பதின்ம வயதைச் சேர்ந்த 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வருடாந்தம் வெளியிடும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான புள்ளிவிபரங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 53 சிறுமிகள் கர்ப்பம் தரித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், மாணவர்களுக்கு முறையான பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என்றும் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.