303 மில்லியன் வருமானம் ஈட்டிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை!
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, கடந்த நவம்பர் மாதத்துடன் தொடர்புடைய கடன்களை மீளப்பெற்று, சொத்துக்கள் மூலம் 303 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடமும் வருமானம் ஈட்ட திட்டம்
அத்துடன் இந்த மாதமும் 300 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை எதிர்பார்ப்பதுடன், அடுத்த வருடமும் இதேபோன்று வருமான நிலையைப் பேணுவதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய செலவினங்களுக்காக சுமார் 150 மில்லியன் ரூபாவை அதிகார சபை செலவிடுகிறது.
எனினும், தற்போதைய வருமானத்தின்படி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை திறைசேரிக்கு சுமையின்றி இயங்கக்கூடியதாக உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் திகாரசபை தலைவர் ரஜீவ் சூரியாராச்சி மேலும் தெரிவித்தார்.