வீட்டில் பதுங்கியிருந்த 3 பெண் சிப்பாய்கள் ; 119 இற்கு பறந்த அழைப்பு
சேவைக்கு சமூகமளிக்காமல் வீடொன்றில் பதுங்கியிருந்த 22 வயதுடைய மூன்று பெண் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் கொக்காவில் மற்றும் சந்துன்புர இராணுவ முகாம்களில் கடமையாற்றும் ஹசலக்க, தெனிபிட்டிய மற்றும் பொல்கஸ்சோவிட்ட ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவத்திடம் ஒப்படைப்பு
பொல்கசோவிட்டையைச் சேர்ந்த பெண் சிப்பாய் விடுமுறையில் சென்றிருந்த நிலையில், மற்றைய இருவரும் அவரைச் சந்தித்து பல நாட்கள் மத்தேகொடவில் உள்ள வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் வசிப்பவர்கள் இவர்கள் தங்கி இருப்பதை 119 தொலைபேசி எண் ஊடாக பொலிஸாருக்கு தெரிவித்தனர்.
பொலிஸாரின் விசாரணையில் பெண் இராணுவ சிப்பாய்கள் உண்மையிலேயே தங்கள் சேவையை விட்டு வெளியேறியது தெரியவந்த நிலையில் மேலதிக விசாரணைக்காக மூவரும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.