மேலும் 25 இந்திய மீனவர்கள் கைது
அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் இன்று (1) திங்கட்கிழமை அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையிலேயே 25 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களின் 4 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதான 25 இந்திய மீனவர்களும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.