2 நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு; கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை முதல் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வான்கதவுகள் ஒவ்வொன்றும் ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து 1,400 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 18 அங்குலம் வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வினாடிக்கு மொத்தமாக 9,000 கன அடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்படுவதாகவும் பொல்கொல்ல மகாவலி அதிகார சபைக்கு பொறுப்பான பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனவே பொல்கொல்ல மஹாவலி அணைக்குக் கீழ் உள்ள மக்கள் மஹாவலி கங்கையைப் பயன்படுத்தும்போது மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பொல்கொல்ல மகாவலி அதிகார சபைக்கு பொறுப்பான பொறியியலாளர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.