இலங்கையில் வீடொன்றில் மோசமாக செயலில் ஈடுபட்டுகொண்டிருந்த இரு ஜோடிகள்!
சீன நிறுவனம் ஒன்றிற்கு ஒன்லைனில் பாலியல் காட்சிகளை வெளியிடுவதன் மூலம் பாரிய அளவில் பணம் சம்பாதிக்கும் மோசடி தொடர்பில் ஊடகம் ஒன்று வௌிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த மோசடியாளர்களை தேடி குறித்த ஊடகத்தின் ஊழியர்கல் பிலியந்தலை, படகெத்தர கொங்கஹவத்த பகுதிகளுக்கு சென்றனர்.
பிலியந்தலை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் அதன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவுடன் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஊடக குழு அந்த வீட்டை அடைந்தபோது, வீட்டினுள் பாலுறவில் ஈடுபட்டிருந்த ஒரு ஜோடியையும் மற்றொரு ஜோடியையும் பிடிக்க முடிந்தது.
இதன்போது, இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டனர். இணைத்தளம் மூலம் வர்த்தகம் செய்வதாக கூறி குறித்த வீட்டை சில வருடங்களுக்கு முன்னர் குறித்த குழுவினர் வாடகைக்கு பெற்றுள்ளனர்.
இருப்பினும், குறித்த வீட்டில் பாலியல் ரீதியான வீடியோக்களை பதிவு செய்து அவற்றை சீன நிறுவனத்திற்கு விற்று பாரியளவில் பணம் ஈட்டி வந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இந்த சீன நிறுவனத்தை முகநூலில் அடையாளம் கண்டு, பின்னர் அதற்குப் பயன்படுத்தப்பட்ட செயலி மூலம் காட்சிகளை நேரடியாக வௌியிட்டு வந்துள்ளனர்.
இதன் ஊடாக சந்தேக நபர்கள் வாரத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் சம்பாதித்துள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையான முகத்தை மறைக்க முகமூடி அணிந்து படப்பிடிப்பை நடத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்தது.
இந்த பாலியல் செயல்பாடுகளை இணையத்தில் வெளியிடும்போது சந்தேக நபர்கள் பின்பற்ற வேண்டிய தொடர் அறிவுறுத்தல்களையும் சீன நிறுவனம் அவர்களுக்கு வழங்கியிருந்தது.
குறித்த வீட்டில் சோதனை நடத்தியதில், சுயஇன்பக் கருவிகள், படப்பிடிப்பிற்கு பயன்படுத்திய உபகரணங்கள், பாலியல் காட்சிகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசிகள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன் ஆபாச காட்சிகளை தயாரித்து பொது காட்சிக்காக வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.