யாழ்.கொக்குவில் இரு வெதுப்பக உரிமையாளர்களுக்கு நீதவான் விடுத்த உத்தரவு!
நல்லூர் சகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், பொது சுகாதார பரிசோதகர் குழுவினர் கடந்தமாதம் 12.06.2024 ம் திகதி கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகங்கள் பரிசோதித்துள்ளனர்.
குறித்த நடவடிக்கையின் போது, சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 02 வெதுப்பகங்கள் இனங்காணப்பட்டன.
குறித்த வெதுப்பகங்களிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்குகள் கடந்த 24.06.2024 அன்று தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கினை விசாரித்த நீதவான் ஒரு பேக்கரியை மூடி சீல்வைக்குமாறும், மற்றைய பேக்கரியை விரைந்து திருத்தி அமைக்குமாறும் கட்டளை வழங்கினார்.
குறித்த வெதுப்பகம் பா.சஞ்சீவனால் சீல் வைத்து மூடப்பட்டது. மேலும் வழக்கினை இன்றைய தினத்திற்கு 03.07.2024 ஒத்திவைத்தார்.
இன்று வழக்குகள் மீள விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நீதவான் செ. லெனின்குமார் இரு பேக்கரி உரிமையாளர்களிற்கும் தலா 80,000/= தண்டம் அறவிட்டது.
இதேவேளை, திருத்த வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமையால் வெதுப்பகங்களை தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கினார்.