கேரளா நிலச்சரிவில் சிக்கி இதுவரையில் 185 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! நீடிக்கும் சோகம்
கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதுவரை 225 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாவது நாளாக இன்று மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிலச்சரவி இடம்பெற்ற முண்டக்கை பகுதியில் சிக்கிக் கொண்டு தங்கும் விடுதிகளில் தஞ்சம் புகுந்திருந்த 19 பேர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், சாலியாற்றில் 15 சடலங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்த 185 பேரில் 89 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் 143 சடலங்களுக்கு உடற்கூராய்வு நிறைவுபெற்றுள்ளது.
நிலச்சரிவில் மாயமானவர்கள் 225 பேர் என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள வரலாற்றில் மிக மோசமான நிலச்சரிவு இதுவென்பதால் நேற்றும், இன்றும் கேரள அரசு துக்கம் அனுசரிக்கிறது.
மேலும் வயநாட்டில் 45 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3000க்கும் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 96569 38689, 80860 10833 ஆகிய தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் பொது மக்கள் உதவிக்காக அறிவித்துள்ளது