இலங்கையில் சீரற்ற காலநிலையால் இதுவரையில் இத்தனை பேர் மரணமா!
நாட்டில் அண்மை நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த 48 மணிநேரத்துக்குள் 17 பேர் பலியாகியுள்ளனர்.
மாத்தறையில் 4 பேர், இரத்தினபுரியில் 5 பேர், கொழும்பில் 3 பேர் என 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவால் 23 மாவட்டங்களைச் சேர்ந்த 87 ஆயிரத்து 379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் 119 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 23 ஆயிரத்து 706 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
களுகங்கை, நில்வளா கங்கா மற்றும் கிங் கங்கை ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து வருகின்றது.
இதனால் சில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
அனர்த்தங்கள் இடம்பெறும் பகுதிகளைப் பார்வையிடச் செல்ல வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.