தமிழர் பகுதியில்160 ஏக்கர் தனியார் காணி இந்தியாவுக்கு தாரைவார்ப்பு; உரிமையாளர்களை விரட்டிய பொலிஸார்!
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,நடுக்குடா பாவிலான்பாட்டன் குடியிருப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 160 ஏக்கர் பயன் தரு பனை மரங்களை கொண்ட காணிகள் இந்திய தனியார் கம்பெனி தாரைவர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த காணி சட்ட விரோதமான முறையில் இந்திய தனியார் கம்பெனி ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
உரிமையாளர்களை அச்சுறுத்திய பொலிஸார்
அந்த காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு கனிய மணல் அகழ்வு இடம் பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் சுமார் 10 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது காணிக்கான சுற்று வேலி அமைக்கும் நடவடிக்கை பொலிஸாரின் பாதுகாப்புடன் முன்னெடுக்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
காணியின் உரிமையாளர்கள் அங்கு சென்ற நிலையில் அவர்களை ஆச்சுறுத்தியதாகவும் தெரியவருகின்றது. இந்நிலையில் தமது காணிகள் அடாவடித்தனத்துடன் அபகரிப்பு செய்யப்பட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.