பிரான்ஸில் கைபேசிக்கு சார்ஜ் போட முயன்ற 13 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!
பிரான்ஸில் குளித்துக் கொண்டு இருக்கும் போது தன் கைபேசியை சார்ஜ் போட முயன்ற சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பிரான்ஸில் Saone-et-Loire மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 13 வயது மதிக்கத்தக்க சிறுமி குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தபோது அவர் தனது கைபேசியை சார்ஜ் போட முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக, மின்சாரம் தாக்கியதுள்ளது. விரைந்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் அவர் மூளை சாவு அடைந்து விட்டதாகக் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இவ்விபத்துக்கான காரணம் சரியாக தெரியவில்லை. ஆனால் மின்சாரம் தாக்கி தான் அவர் இறந்து இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
மேலும், இச்சம்பவத்தின் மற்ற இளம் தலைமுறையினர் ஒரு விழிப்புணர்வாக எடுத்துக் கொண்டு மின்சார உபகரணங்களை பயன்படுத்தும் போது கவனமுடன் செயல்பட வேண்டும்.