112 வயதில் 8 திருமணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் மூதாட்டி! ஆச்சிரிய சம்பவம்
வெளிநாடொன்றில் 30 கொள்ளு பேரக் குழந்தைகளுடன் 112 வயதில் இருக்கும் சிதி ஹவா ஹுசின் என்ற மூதாட்டி தனது மறுமணத்திற்கு மணமகன் தேவை என்று கூறியுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
112 வயதான சிதி ஹவா என்பவர் இதுவரை ஏழு முறை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதன் மூலம் அவருக்கு 4 குழந்தைகளும் உள்ளன. இருந்த போதிலும் இப்போதும் அவர் 8-வது திருமணத்திற்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கிறார்.
இது தொடரில் அந்த மூதாட்டி கூறுகையில்,
"எனது முன்னாள் கணவர்களில் சிலர் உயிரிழந்து விட்டனர், மற்றவர்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நாங்கள் விவாகரத்து செய்துள்ளோம்.
ஆனால், இப்போது நான் தனிமையில் இருக்கிறேன். எனக்குத் திருமணம் செய்து கொள்ள இப்போது மணமகன் தேவை என்றார். அவரது வேலைகளை அவரே செய்து கொள்கிறார். வயது முதிர்ந்த போதிலும், சிதி ஹவா இன்னும் சுறுசுறுப்பாகவே இருக்கிறாராம்.
இவருக்கு மொத்தம் 19 பேரக்குழந்தைகள் இருக்கும் நிலையில், அவர் இப்போது தனது இளைய மகன் அலி செமே (58) என்பவருடன் வசித்து வருகிறார்.
இவர் திருமணத்திற்குத் தயாராக இருந்தாலும் கூட மணமகன்தான் கிடைக்கவில்லை என வேதனையில் தவித்து வருகிறார்.