கனடாவில் கொலை செய்யப்பட்ட 06 இலங்கையர்கள்; குற்றவாளியின் உறவினர் தெரிவித்த விடயம்
கனடா - ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் பல தகவல்களை வெளியிட்டுள்ளன.
இதன்படி, சந்தேகநபராக 19 வயதுடைய ஃபெப்ரியோ டி-சொய்சா என்பவரின் உறவினரான அத்தை ஊடகங்களுக்கு முதல் முறையாக கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஃபெப்ரியோ டி சொய்சாவின் அத்தையான அனுஷா டி சொய்சா கனேடிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
நான் கல்லாகிவிட்டேன்
"இந்த சம்பவம் என்னை உலுக்கியது, அந்த குடும்பம் அவரை மிகவும் நல்ல முறையில் நடத்தியது, அந்த குடும்பம் மிகவும் நல்ல குடும்பம், இதை கேட்டு நான் கல்லாகிவிட்டேன், இன்னும் தூங்கவில்லை" எனது சகோதரரின் மூத்த மகன் ஃபெப்ரியோ டி சொய்சா இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடாவுக்கு வந்தார்.
அவர் மிகவும் அமைதியான இளைஞர், மிகவும் நல்ல மனிதர்.
கனடாவுக்கு வந்த பின்னர் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தார்.
இந்நிலையில், தனுஷ்கவின் குடும்பம் ஒட்டாவாவிற்கு வந்த பின்னர், தனுஷ்கவின் பெரிகன் டிரைவ் வீட்டிற்கு ஃபெப்ரியோ டி சொய்சா குடிபெயர்ந்தார்.
அங்கு செல்வதற்கு முன்பு, ஒட்டாவாவில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டில் வசித்த டி சொய்சா அனைவரையும் தவிர்த்துவிட்டு தனுஷ்கவின் வீட்டில் வசிக்கச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
உறவுகளை துண்டித்த சந்தேகநபர்
எங்களுடனான எல்லா உறவுகளையும் துண்டித்துவிட்டார்.
எங்களுடனான எல்லா தொடர்புகளையும் அவர் நிறுத்திவிட்டார், எங்கள் தொலைபேசி எண்களையும் தடைசெய்துள்ளார்.
சமூக ஊடகங்களில் கூட எங்களை தடைசெய்துள்ளார். இது போன்ற ஒன்றை நான் கனவிலும் நினைக்கவில்லை." என சந்தேகநபரின் அத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆறு பேர் படுகொலை தொடர்பில் ஒட்டாவா பொலிஸாரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஃபெப்ரியோ டி சொய்சா எதிர்வரும் (14.03.2024) ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான Barhaven என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட ஆறு இலங்கையர்கள் அவர்களது சொந்த வீட்டில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில், கொலை இடம்பெற்ற அதே வீட்டில் வசித்த டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை இளைஞன் கைது செய்யப்பட்டார்.
இதுவரை, அந்த இளைஞன் மீது ஆறு கொலைகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கனடா வரலாற்றில் மிக மோசமான படுகொலையாக இது பதிவாகியுள்ளது.