காருக்குள் இளைஞன் அரங்கேற்றிய செயல் ; சோதனையில் அதிர்ந்த பொலிஸார்
ஹோகந்தர, வனகுரு மாவத்தை பகுதியில் காரில் 2 கிலோ கிராமிற்கும் அதிகமான 'குஷ்' போதைப்பொருளைக் கடத்திச் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 'குஷ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
இதன்போது போதைப்பொருளுடன் சந்தேகநபரிடமிருந்த 39,290 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கலல்கொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மாலபே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.