போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர்கள் : விசாரணையில் வெளியான அதிர்ச்சி
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் புளூமெண்டல் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் புளூமெந்தல் ரயில் பாதைக்கு அருகில் நேற்று (24) கொட்டஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நடத்தப்பட்ட சோதனையில், 12 கிராம் 400 மில்லிகிராம் மற்றும் 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்கள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 31 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் புளூமெண்டல் மற்றும் கொச்சிக்கடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், கடந்த 18 ஆம் தேதி இரவு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளூமெண்டல் ரயில் பாதைக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் ஒருவரைத் தாக்கி கொலை செய்த குற்றத்தில் இரண்டு சந்தேக நபர்கள் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.