தமிழர் பகுதியில் கெப் வண்டியுடன் பிடிபட்ட இளைஞர்கள் ; சிக்க வைத்த இரகசிய தகவல்
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 542 கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு சந்தேக நபர்களை ஒரு கெப் வண்டியுடன் கடற்படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினர், கற்பிட்டி புத்தளம் விஜயகடுபொத, அஞ்சல் 61 வீதித் தடுப்பில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மேலதிக சட்ட நடவடிக்கை
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 மற்றும் 24 வயதுடைய புத்தளம், எத்தாளை மற்றும் பாலாவி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,
டிசம்பர் 9ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வீதியில் பயணித்த கெப் வண்டி சோதனையிடப்பட்டது.
தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு அக்கா நடத்திய கொடூரம் ; வாக்குமூலத்தால் அதிர்ந்து போன பொலிஸார்
அங்கு சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுசெல்லப்பட்ட 542 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது கெப் வண்டி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும், சந்தேக நபர்கள், கெப் மற்றும் பீடி இலைகளின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் திணைக்கள விசேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.