யாழில் இளைஞரை தாக்கி அவரிடம் கொள்ளையிட்ட 6 பேரும் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
யாழில் இளைஞர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி குறித்த தரப்பினர் தொலைபேசி ஊடாக இளைஞனை மறவன்புலவுக்கு வரவழைத்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு பிரவேசித்த இளைஞரை தாக்கி அவரிடமிருந்த நான்கரைப் பவுண் தங்க நகைகள், 2 கையடக்க தொலைபேசிகள், கைக்கடிகாரம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சிலாபத்தைச் சேர்ந்த 3 பெண்களும், கனகராயன்குளத்தை சேர்ந்த இரு ஆண்களுமாக ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது குறித்த நகைகளை கொள்வனவு செய்த வவுனியாவைச் சேர்ந்த கடை உரிமையாளர் அவற்றை உருக்கி தங்க தட்டுகளாக மாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த 6 சந்தேக நபர்களும் நேற்றைய தினம் (10-101-2023) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.